Friday, April 24, 2009

ஈழ ஆர்ப்பாட்டம்:சிறிது நேரம் மட்டும் சீமான் பங்கேற்பு

ஈழத்தமிழர்களுக்காக பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

பாரதிராஜா தலைமையில் நடைபெற்றுவரும் இப்போராட்டத்திற்கு நடிகர் சத்யராஜ், நடிகர் பார்த்திபன், இயக்குநர் பாலுமகேந்திரா, இயக்குநர் அமீர், இயக்குநர் மணிவண்ணன், ஏ.ஆர்.முருகதாஸ், சரவண சுப்பையா, வெற்றி மாறன், ஹரி, பிரவீன்காந்த், சுசிகணேசன், சசி, சமுத்திரகணி நடிகர்கள் கஞ்சா கருப்பு மற்றும் தாமரை, ரோகினி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
சின்னத்திரை கலைஞர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
டைரக்டர் சீமான் இப்போராட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு சென்று விட்டார். மேலும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று மாலை 5மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் முடிவடைகிறது.
போராட்ட முடிவில் ஈழப்பிரச்சனை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன

No comments:

Post a Comment