Tuesday, April 28, 2009

இடம்பெயர்ந்த மக்கள் மீது தொடரும் கனரக ஆயுதங்களின் தாக்குதல்கள்




சிறீலங்காப் படையினரின் முப்படையினரும் ”மக்கள் பாதுகாப்பு வலயம்” மீது தொடர்ச்சியாக அகோர தாக்குதல்களை நடத்திவருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் வதிவிடங்களை இலக்கு வைத்து பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், ஆர்.பி.ஜி உந்துகணைகள், டாங்கித் தாக்குதல்கள் மற்றும் நெடுந்தூர துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருகின்றனர்
இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பு பதுங்குழிகளில் பாதுகாப்பைத் தேடிக்கொண்டதால் நேற்று திங்கட்கிழமை எதிர்பார்த்த இழப்புகளை விட உயிரிழப்புகள் குறைவாகவே இருந்துள்ளது.

No comments:

Post a Comment