Thursday, April 23, 2009

அரசாங்கம் சிங்களமயமாக்கல் திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது ‐ ஹக்கீம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் சிங்கள மயமாக்கல் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார். ஏற்கனவே புல்மோடை போன்ற பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தவும், சில வீதிகளுக்கு சிங்களப் பெயர்களை சூட்டவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உள்ளுராட்சி நிர்வாகங்களினது அனுமதியின்றி இந்த சிங்கள மயமாக்கல் சூழ்ச்சித் திட்டம் அரங்கேறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தல் சட்டமூலம் தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி பிரபாகரனுக்கு 24 மணிநேர காலக்கெடு விதித்ததனைப் போன்று நாமும் ஜனாதிபதிக்கு மூன்று வார காலக்கெடு விதிக்க உள்ளதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று வார காலத்திற்குள் உள்ளுராட்சி தேர்தல் சட்ட மூலம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்ப வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment