Tuesday, April 21, 2009
படையினரிடம் ஓருபோதும் சரணடையப் போவதில்லை – எஸ். புலித்தேவன் :
அரசாங்கப் படையினரிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார். இறுதி வரையில் தமது போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என புலித்தேவன் தெரிவித்துள்ளார். ரொய்டர்ஸ் உலக செய்தி சேவைக்கு அளித்த தொலைபேசி செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள்ளேயே வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கப் படையினரே தமிழ்ச் சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னி பெரு நிலப்பரப்பில் பாரிய இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும், மிகக் குறுகிய காலத்திற்குள் சர்வதேச சமூகம் தலையீடு செய்யப்பட்டால் பாரிய அழிவுகள் ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய தினம் அரசாங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 1000 சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன், 2000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பூரண ஆதரவளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அரச படையினர் சிவிலயின்கள் மீது தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே கட்டுப்பாடற்ற பிரதேசத்திலிருந்து தப்பித்து வரும் சிவிலியன்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment