Thursday, April 30, 2009
அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை – புலிகள் மீண்டும் வலியுறுத்து :
அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்ச் சிவிலியன்களை மனிதய கேடயமாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் எவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கினாலும் தமிழீழ போராட்டம் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் தமிழீழ பேராட்டம் எந்தக் காரணத்திற்காகவும் கைவிடப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கத்தை யுத்தம் நிறுத்தமொன்றுக்கு செல்லுமாறு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அசோசியேடட் பிரஸ் ஊடகத்திற்கு அளித்த மின்னஞ்சல் செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment